கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றப்பின்னணியுடைய 64 பேர் கைது


தமிழகத்தில் தற்போது நிலவி வரும் நிலையில்லாத அரசியல் சூழல் காரணமாக பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்த சிலர் முயல்வதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் குற்றப்பின்னணி உடைய நபர்கள், ரவுடிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 63 பேரும், மாநகர பகுதியை சேர்ந்த ஒருவரையும் என மொத்தம் 64 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சிலர் மீது குற்றப்பின்னணி உள்ளதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், காவல்துறையினரின் இந்த அதிரடி சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...