உடுமலை திருப்பதி கோவிலில் பள்ளி மாணவர்களுக்காகச் சிறப்பு யாகம்!

உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டிச் சிறப்புப் பூஜை.


திருப்பூர்: உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை தளிரோடு பள்ளபாளையம் அருகே செங்குளம் கரையில் உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.



இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டிச் சிறப்புப் பூஜை நடந்தது.



இந்த பூஜையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார்.



இந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



இதற்கான ஏற்பாடுகளை உடுமலை பாலாஜி சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர்‌‌ ராமகிருஷ்ணன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...