சூலூரில் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது

சூலூரில் கைப்பையில் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்குக் கொண்டு சென்ற வடமாநிலத்தவரிடம் இருந்து 1.5கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்.


கோவை: சூலூர் சுல்தான்பேட்டை அருகே கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்கலேட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இடையபாளையம் பிரிவு பகுதியில் நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர் வைத்திருந்த கைப்பையைச் சோதனை செய்தனர். அதில் மஞ்சள் நிறத்தில் சாக்லேட்டுகள் இருந்துள்ளது. அந்தச் சாக்லேட்டை பிரித்துப் பார்த்தபோது அது கஞ்சா சாக்லேட் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த நபரை சுல்தான்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில், அவர் பீகார் மாநிலம் கங்குலி கிராமத்தைச் சேர்ந்த பப்லு குமார் என்பது தெரியவந்தது. மேலும் பீகார் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து இங்குள்ள வட மாநில நபர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததும் தெரிய வந்தது.



அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...