கோவை இடையர்பாளையத்தில் கேரள லாட்டரிகள் விற்பனை - ஒருவர் கைது

கோவை இடையர்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இடையர்பாளையம் பகுதியில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்குள்ள மகாலட்சுமி பேக்கரி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு லாட்டரி டிக்கெட்டுகளை ஒரு நபர் விற்பனை செய்துவந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகள், 1200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சண்முகத்தை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...