தபெதிக பொதுச்செயலாளர் மனைவி மறைவு - திமுக எம்பி, அமைச்சர் அஞ்சலி

தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தியின் உடலுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி ஆ.ராசா எம்பி உள்ளிட்ட பலர் மலரஞ்சலி.


கோவை: கோவை காந்திபுரத்தில் வசித்து வந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி இன்று காலமானார்.



அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றிச்செல்வன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி, பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.



இதைத் தொடர்ந்து, காந்திபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் நடைபெற்றது.

இறுதி ஊர்வலத்தில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...