திருப்பூரில் பிப்.11 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பிப்ரவரி 11ஆம் தேதி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.



திருப்பூர்: சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் இளைஞர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடக்கிறது.



இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையர் காந்தி குமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்டத்திலும் இந்த வேலை வாய்ப்பு முகமானது வரும் பிப்ரவரி 11ஆம் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடக்க உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளது. இதன் மூலம் 10,000 மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்கள் https://tirupurjobfar.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களை அறிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...