கேரளாவில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

பாலக்காடு மாவட்டத்தில் ஒருவரை தாக்கி கொன்று விட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறை மருத்துவர்கள் அடங்கிய 75 பேர் கொண்ட குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக பிடித்தனர்.


கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோணி என்ற மலை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்பகுதியில் நடை பயிற்சிக்கு சென்ற சிவராமன் என்பவரை யானை தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவசாய நிலங்களில் புகுந்த அந்த காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனால் அந்த காட்டு யானையை பிடித்து அடர் வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வனத்துறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த காட்டு யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறை கால்நடை மருத்துவர் அருண் சக்ரியா தலைமையில் 75 பேர் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டது.



காட்டு யானையை வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை லாரியில் ஏற்றி அழைத்து சென்றனர். பிடிபட்ட யானையை அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூண்டில் வைத்து கும்கி யானையாக மாற்ற பயிற்சி கொடுக்க உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பட்டதற்கு பிறகு அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...