கோவை வால்பாறை அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டெருமை - வனத்துறையினர் ஆய்வு

வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் அருகேயுள்ள வனப்பகுதியில் காட்டெருமை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் காட்டெருமையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதி அருகே சிறிய வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டெருமை, கரடி, மான், யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இதனிடையே இந்த வனப்பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு 2 காட்டெருமைகள் சண்டையிட்டு கொண்டதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்று வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.



அப்போது அருகில் சென்று பார்த்த போது, காட்டெருமை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர், ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இறந்த காட்டு எருமையின் உடலில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அதில், 4 நாட்களுக்கு முன்பு 2 காட்டெருமைகள் சண்டை போட்டுக் கொண்டதில் ஒரு காட்டெருமைக்கு காயங்கள் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இறந்த காட்டு எருமையின் உடலை வனத்துறை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...