உடுமலை அருகே சலங்கை மாடுகளுக்குப் பூஜை செய்து கிராம மக்கள்

குடிமங்கலம் அருகே சலங்கை மாடுகளுக்குப் பொதுமக்கள் பால், பழம் வைத்து பூஜை செய்து வழிபாடு.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் கிராமங்கள் தோறும் இசைக்கேற்ப ஆடும் சலங்கை மாடுகளுக்குக் கிராம மக்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இசை கேட்ப ஆடும் வகையில், மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை, கோவிலுக்குச் சொந்தமானது என்பதைக் குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்ற குறிகள் காணப்படுகின்றன.

மாட்டுப்பொங்கல் அன்று பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகளுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு குச்சிகளைக் கையில் வைத்து ஆள் கொண்ட பால கோவிலுக்குக் கொண்டு சென்று ஆடுகின்றனர்.



பின்னர் சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்குக் கொண்டு வந்து பொதுவான இடத்தில் அல்லது கோவில் பகுதியில் வைத்து பால், பழம் பொங்கல், வைத்து வழிபாடு செய்கின்றனர். கிராம மக்கள் சாமி பாடல்கள் தொடர்ந்து பாடும் பொழுது சலங்கை மாடு தானாகவே சென்று பால், பழம், பொங்கலைச் சாப்பிடுவது சிறப்பாகக் கருதப்படுகின்றது.



உடுமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் குடிமங்கலம் அருகே பண்ணைக்கிணற்றில் கிராம மக்கள் பொதுஇடத்தில் பால், பழம், பொங்கல் வைத்து சலங்கை மாடுகளுக்குப் பூஜை செய்து வழிபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...