கோவையில் ஆட்டோ ஓட்டுநர் எரித்துக்கொலை - ஒருவர் கைது

கோவையில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் மீது மர்ம நபர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவத்தில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது50). லோடு ஆட்டோ ஓட்டுநரான இவர், காலை லோடு ஆட்டோவில் மணிகண்டன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது, அங்குவந்த நபர் ஒருவர், திடீரென ரவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.



இதில், ரவி 90 சதவீதம் அளவுக்கு படுகாயமடைந்தார். இதைப்பார்த்ததும், அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து ரவியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பீளமேடு போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ரவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தது நேருநகரை சோ்ந்த கூலித்தொழிலாளி பூபாலன் (வயது40) என்பது உறுதியானது. இதையடுத்து, பூபாலனை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...