கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரம்!

கோவை உக்கடம் மேம்பால பணிக்காக, பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கட்டிடங்களை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உக்கடம் - ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணியில், மாநில நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரையிலான வேலைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, உக்கடம் பேருந்து நிலையம் எதிரே, இறங்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

உக்கடம் பகுதியில் ஏறுதளம் அமைக்க, பாலக்காடு பேருந்துகள் நிற்குமிடத்தில் உள்ள வணிக வளாகத்தை மாநகராட்சி நிர்வாகம் இடித்து தர வேண்டும். இதற்கான இழப்பீடு தொகையை ஓராண்டுக்கு முன்பே மாநில நெடுஞ்சாலைத்துறை செலுத்திவிட்டது. இந்த வணிக வளாகம் இடிப்பு பணிகள் துவங்குவதற்கான கள ஆய்வுகளை நகரமைப்பு பிரிவினர் மேற்கொண்டனர்.



இந்நிலையில், இன்று காலை முதல் உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ள சுமார் 20 கடைகளை கொண்ட வணிக வளாகத்தை இடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.



கட்டிடங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டபிறகு மேம்பாலத்தின் ஏறுதளம் அமைக்கும் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளா மாநிலம் பாலக்காடு பேருந்துகள் நிற்கும் பேருந்து நிலையமும் தற்போது அகற்றப்படவிருப்பதால், கேரளா பேருந்துகள் இனி அருகே உள்ள மற்றொரு மேடையில் நிற்கும் எனவும், இடிப்பு பணிகள் நடப்பதால் அருகே பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிச் செல்ல வேண்டாம் எனவும் ஒலிப் பொருக்கி மூலம் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்திவருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...