கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரம்!

கோவை உக்கடம் மேம்பால பணிக்காக, பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கட்டிடங்களை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உக்கடம் - ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணியில், மாநில நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரையிலான வேலைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, உக்கடம் பேருந்து நிலையம் எதிரே, இறங்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

உக்கடம் பகுதியில் ஏறுதளம் அமைக்க, பாலக்காடு பேருந்துகள் நிற்குமிடத்தில் உள்ள வணிக வளாகத்தை மாநகராட்சி நிர்வாகம் இடித்து தர வேண்டும். இதற்கான இழப்பீடு தொகையை ஓராண்டுக்கு முன்பே மாநில நெடுஞ்சாலைத்துறை செலுத்திவிட்டது. இந்த வணிக வளாகம் இடிப்பு பணிகள் துவங்குவதற்கான கள ஆய்வுகளை நகரமைப்பு பிரிவினர் மேற்கொண்டனர்.



இந்நிலையில், இன்று காலை முதல் உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ள சுமார் 20 கடைகளை கொண்ட வணிக வளாகத்தை இடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.



கட்டிடங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டபிறகு மேம்பாலத்தின் ஏறுதளம் அமைக்கும் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளா மாநிலம் பாலக்காடு பேருந்துகள் நிற்கும் பேருந்து நிலையமும் தற்போது அகற்றப்படவிருப்பதால், கேரளா பேருந்துகள் இனி அருகே உள்ள மற்றொரு மேடையில் நிற்கும் எனவும், இடிப்பு பணிகள் நடப்பதால் அருகே பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிச் செல்ல வேண்டாம் எனவும் ஒலிப் பொருக்கி மூலம் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்திவருகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...