குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி வீடியோ வைரல்

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை உலா வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நீலகிரி: சிறுத்தை நடமாட்டம் இருந்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் வனத்துறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடிக் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில் ராணுவ கல்லூரியை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ராணுவ கல்லூரிக்குள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.



இந்த காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைவரலாகி வருகின்றன.



வனத்துறைக்கு ராணுவ கல்லூரியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ கல்லூரிக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...