உடுமலை அருகே அரசு பேருந்து மீது வாகனங்கள் மோதல்; 4 பேர் காயம்!

பழனி சென்று திரும்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மற்றும் அரசு பேருந்து மீது மோதி விபத்து. உடுமலை அருகே நடந்த இந்த விபத்தில் 4 பேர் படுகாயம்.


திருப்பூர்: உடுமலை அருகே அரசு பேருந்து மீது கார்கள் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.

கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் தனது குடும்பத்துடன் காரில் பழனிக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.



இவர்கள் வந்த கார் திருப்பூர் மாவட்டம் உடுமலை -பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராகல் பாவி பிரிவு அருகே வந்தபோது, எதிராக வந்த கார் மீது மோதி முன் சென்ற அரசு மீது இரண்டு கார்களும் மோதியது.



இதில், இரண்டு கார்களின் முன்பகுதியும் சேதமடைந்தது. அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து காரில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கதிர்வேலுக்கு பலத்த காயமேற்பட்டதால், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



விபத்து குறித்து உடுமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவத்தில் அரசு பேருந்தில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...