சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டக் கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்.


கோவை: சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், ஜே.கிருஷ்ணாபுரம் வருவாய் கிராமம், வலசுப்பளயத்தில் உள்ள செல்வராஜ் நிலத்திற்கு பிஏபி பாசனத் திட்டத்தில் ஆயக்கட்டு நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகில் உள்ள விவசாயி ஷோபனாவின் நிலத்தின் வழியாக அரசு சார்பில் கான்கிரீட் அமைக்கப்பட்டு தண்ணீர் வரும் கால்வாயும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயி ஷோபனா, சிறு விவசாயி செல்வராஜுக்கு பி.ஏ.பி தண்ணீரை விடாமல் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாகத் தடுத்துள்ளதாகவும், கால்வாயையும் மண்ணை கொட்டி மூடி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விவசாயி செல்வராஜ் கடந்த ஆறு மாதங்களாக சூலூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.



ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாயை மீட்டு, தண்ணீர் ஏற்பாடு செய்து தரக் கோரி சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.



ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயி ஷோபனா மீது வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் கோரிக்கை நிறைவேறும் வரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் சூலூர் வட்டாட்சியர் மற்றும் பிஏபி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



சேதப்படுத்தப்பட்ட வாய்க்காலை உடனடியாக சரி செய்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருவதாகவும் உறுதியளித்தனர்.

கோரிக்கைகளை வரும் 26ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தன்று வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மீண்டும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்றுத் தற்காலிகமாக இன்று விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...