குட்டியுடன் புகுந்த காட்டு யானைகள் - 'போ ராஜா போ' என்று பாசத்துடன் விரட்டியடித்த கோவை கிராம மக்கள்..!

கோவை தொண்டாமுத்தூர் தாளியூர் அருகே கிராமத்திற்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானைகளை கிராம மக்கள் அன்பான வார்த்தைகளால் கூறி விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தாளியூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில், இன்று அதிகாலையில் குட்டியுடன் ஐந்து காட்டு யானைகள் புகுந்தன. அங்கிருந்த சாலையை அவை கடந்து சென்றன.



அதைப் பார்த்த குடியிருப்புவாசிகள், காட்டு யானைகளை "போ ராஜா போ" என அன்பான வார்த்தைகளைக் கூறி விரட்டினர்.



இதையடுத்து, அந்தக் காட்டு யானைகள் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றன. இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். காட்டு யானைகளை கிராம மக்கள் அன்பான வார்த்தைகளால் பேசி விரட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...