குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி - கோவையில் நடந்த சோகம்!

கோவையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குளிர்பானம் என நினைத்துக் குடித்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி தர்ஷித் என்ற ஐந்து வயது மகன் இருந்தார். பிரகாஷ் தனியார் மருந்தக நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி தர்ஷித்துக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனிடம் பிரகாஷ் கேட்டபோது, வீட்டில் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை காட்டி அதை குடித்ததாக தெரிவித்துள்ளார். அதை பிரகாஷ் சோதனை செய்தபோது அந்த பாட்டிலில் கரப்பான் பூச்சியை கொள்வதற்கான பூச்சிமருந்து இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ், சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்த தர்ஷித், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர் எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை குளிர்பானம் என நினைத்து குடித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...