கோவையில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் ஆணையம் சிறப்புற நடத்திட பார்வையாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் திருதயானந்த் கட்டாரியா தகவல்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் திருதயானந்த் கட்டாரியா தலைமையில் நடைபெற்றது.



இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன், கூட்டுறவுச் சங்க தேர்தல் செயலாளர்/கூடுதல் பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவுச் சங்கத்தின் இணை பதிவாளர் பார்த்திபன், கூட்டுறவு சங்க பதிவாளர் கண்ணப்பராஜா மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இந்துமதி, துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன மேலாண்மை இயக்குநர் சிவக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய திருதயானந்த் கட்டாரியா, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் 15 இதர செயற்பதிவாளர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் மொத்தம் 23,149 அனைத்து வகை கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 2018ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த தேர்தலில் முதற்கட்டம் முதல் நிலையில் தேர்தல் முடிவற்று 02.04.2023 அன்று 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவுறும் சுமார் 4,684 சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.



இவை தவிர, புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள், செயலாட்சியர் கட்டுப்பாட்டிலுள்ள சங்கங்கள் போன்று இதர வகை சங்கங்களுக்கும் ஆணையம் தேர்தல் நடத்தவுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்டத்தில் வரும் 23 மற்றும் 4 நிலைகளிலுள்ள சுமார் 13,784 சங்கங்களுக்கான 5 ஆண்டுகள் பதவிக்காலம் ஆகஸ்ட் 2023-ல் முடிவடைவதால் இவற்றுக்கு ஆகஸ்ட் 2023-ல் தேர்தல் நடத்தப்படும். கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களைச் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் ஆணையம் சிறப்புற நடத்திடப் பார்வையாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிச் சிறந்த முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...