தாராபுரத்தில் சாலையில் திடீரென விழுந்த மின்கம்பம் - போக்குவரத்து பாதிப்பால் அவதி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: தாராபுரம் - அலங்கியம் ரவுண்டானா செல்லும் சாலையில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் இருந்த மின்கம்பத்தில் இன்பஅரசு, மற்றும் பிரகாஷ் ஆகியோர், ஏறி அருகில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக முயற்சித்துள்ளனர்.



அப்போது, திடீரென அந்த மின்கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் கம்பத்தின் மேலே இருந்த இரண்டு பணியாளர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். அந்தநேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



மின் கம்பம் சாய்ந்ததால், 500 மீட்டா் தொலைவுக்கு சாலையின் இரு புறங்களிலும் மின்சார ஒயா்கள் தொங்கிக் கொண்டிருந்தன.



இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் கீழே விழுந்த மின் பணியாளர்களை மீட்டெடுத்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோ மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



குடியிருப்புப் பகுதியில் நடப்பட்டிருந்த மின்கம்பம் திடீரென உடைந்து விழுந்ததால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...