நீலகிரி கூடலூரில் தேயிலைத் தோட்டத்திற்கு புகுந்த காட்டுயானைக் கூட்டம் - தொழிலாளர்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் திடீரென காட்டு யானைக் கூட்டம் புகுந்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நாளுக்கு நாள் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, ஒற்றை ஆண் காட்டு யானைகளும், மக்னா யானைகளும் தேயிலை தோட்டங்களில் அவ்வப்போது புகுந்து தொழிலாளர்களை தாக்கி, அச்சுறுத்தி வருகின்றன.



இந்த நிலையில், இன்று காலை தேவர் சோலை பகுதியில் உள்ள 3 டிவிஷன் தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானை கூட்டம் ஒன்று புகுந்தது. அதனை கண்டு அச்சம் அடைந்த தொழிலாளர்கள், இன்று பணிக்கு செல்லவில்லை.



இந்த நிலையில் தேயிலைத் தோட்டத்திற்குள் சுற்றித்திரியும் யானை கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



இருப்பினும், அந்த யானை கூட்டம் வனபகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து எஸ்டேட் பகுதியிலேயே சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...