திண்டுக்கல்லில் துணிவு படப் பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சி

திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றவரைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு.



திண்டுக்கல்: சினிமா படப் பாணியில் பட்டப்பகலில் மர்மநபர் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் இன்று காலை மூன்று ஊழியர்கள் பணியிலிருந்துள்ளனர். அப்பொழுது ஆயுதங்களுடன் உள்ளே வந்த மர்மநபர் ஊழியர்கள் மீது ஸ்பிரே அடித்ததோடு, அவர்களைக் கட்டிப்போட்டு, கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களைப் பார்த்து கொள்ளை, கொள்ளை கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரைப் பிடித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் மர்மநபரைக் கைது செய்து காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலீல் ரகுமான்(25) என்பதும், வாழ்க்கை வெறுத்து விட்டதால் துணிவு உள்ளிட்ட சினிமா படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் பட்டப்பகலில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...