'நல்ல நிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி வராததற்கு நான்தான் காரணம்..!' - தலைவர் சரத்குமார் ஓபன் டாக்

கடந்த 16 வருடமாகச் சமத்துவ மக்கள் கட்சி நல்ல நிலைக்கு வரவில்லை அதற்கு நான்தான் காரணம் எனவும், தலைவன் சரியாக இருந்தால் தான், கட்சி சரியாக இருக்கும் எனவும், சமக தலைவர் சரத்குமார் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.



சென்னை: சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திலிருந்து படியே காணொலி காட்சி வாயிலாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார்,



ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்ல. கட்சியின் எதிர்கால திட்டம் குறித்தும் இன்று நிர்வாகிகள் உடன் ஆலோசிக்க உள்ளதாகவும், இன்று மாலைக்குள் ஈரோடு கிழக்கு தொகுதி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.

கொங்கு மண்டலத்தில் சமத்துவ மக்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் விருப்பப்பட்டால் தேர்தலில் போட்டியிடத் தயார். அதுமட்டுமில்லாமல் பிரச்சாரம் செய்யத் தயாராக உள்ளேன், என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தனித்துத் தேர்தலில் நிற்க வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு, ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணியில் இணைந்தோம்.

அதனால், எதிர்வரும் காலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பதை ஆராய்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் மக்கள் நலனை முன் வைத்தே சமகவின் அரசியல் பயணம் இருக்கும்.

கடந்த 16 வருடமாகச் சமத்துவ மக்கள் கட்சி நல்ல நிலைக்கு வரவில்லை அதற்கு நான்தான் காரணம் எனவும், தலைவன் சரியாக இருந்தால் தான் கட்சி சரியாக இருக்கும் எனவும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...