உடுமலையில் அமமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

உடுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பு.


திருப்பூர்: உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அமமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு கலந்து கொண்டார்.



இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவை மண்டலச் செயலாளருமான சண்முகவேலு பேசியதாவது,

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மாணவர்களுக்குச் சத்துணவுத் திட்டம், புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அவற்றைப் பின்பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்து இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் உடுமலையில் பல ஆண்டு காலமாகச் செயல்பட்டு வரும் மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தற்சமயம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடுமலை பகுதியில் மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் இருப்பது சிறந்தது. பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உடுமலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட படுமானால் போராட்டத்தில் ஈடுபடுவோம். தற்போது பழனி மாவட்டம் ஒன்று உருவாக்கி மடத்துக்குளம் பகுதி இணைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் பழனி பகுதியில் மடத்துக்குளத்தை இணைக்க மாட்டோம். அமமுக தொடர்ந்து எதிர்க்கும், என்றார்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...