இளம் குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம் - கொள்ளை, கொலை முயற்சியில் ஈடுபட்டதால் நடவடிக்கை!

கோவை சிறுமுகை பகுதியில் கொள்ளை, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 19 வயது குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கோவை: கோவை சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற மயிலேஷ் (வயது19) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான அந்த நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார்.



அதன் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், குற்றவாளி சதீஷ் என்ற மயிலேஷ் (வயது19) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சதீசை, காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...