முருங்கையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி..? - அதிகாரி விளக்கம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் முருங்கையில் பூச்சிநோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சிக் காட்டுப்பாட்டுமுறை குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.


கோவை: முருங்கை விவசாயத்தில் பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறை குறித்து பொங்கலூர் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா கூறியதாவது:

மழை மற்றும் பனி சீசனில் முருங்கையில் கம்பளி புழு, இலை புழு தாக்குதல் இருக்கும். இளம் குருத்து மற்றும் இலைகளில் இவை குவியலாக இருக்கும். இதனை கட்டுப்படுத்த புழுக்களின் முட்டைகளை சேகரித்து அழிக்க வேண்டும். தாய் பூச்சிகளை அழிக்க விளக்கு பொறிகளை ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து கட்டுப்படுத்தலாம்.

மீன் எண்ணெய் ரோசின் கோப் லிட்டருக்கு 25 கிராம் வீதமும், கார்பரில் 50 டபிள்யூ பி மருந்தை லிட்டருக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து செடிகளின் மேல் தெளித்து கட்டுப்படுத்தலாம். வரும் மாதங்களில் காய்களில் ஈ தாக்குதல் இருக்கும். காய்கள் பிளந்தும், காய்ந்தும் காணப்படும்.

காய்களில் தேன் போன்ற திரவம் வடியும். நோய் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும். மரங்களை சுற்றி நிலத்தை உழுது கூட்டு புழுக்களை அழிக்கலாம். நிம்பிடைன் மருந்தை 50 சதவீத காய் உருவான பின்பும் 35 நாட்கள் கழித்தும் லிட்டருக்கு மூன்று மி.லி., வீதம் கலந்து தெளித்து முருங்கையில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...