தேசிய நூற்பாலைகள் திறக்க வேண்டும்..! - மத்திய அரசுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை

சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், கோவையில் மூடிக்கிடக்கும் தேசிய நூற்பாலைகளை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய தொழில் வர்த்தக சபை வேண்டுகோள்.


கோவை: கோவையில் இந்திய தொழில் வளர்த்தல் சபை கூட்ட அரங்கில் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



அமைப்பின் தலைவர் ஸ்ரீ ராமு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், செயலாளர்கள் கார்த்திகேயன், அண்ணாமலை, துணைத் தலைவர்கள் ராஜேஷ், பி லந்து, துரைராஜ், சுந்தரம், பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர்கள் வனிதா மோகன் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கோவை தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தர, மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசு வாட் வரிவிதிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கோவை விமான நிலையத்தை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். ரயில் திட்ட பணிகள் மேம்படுத்தவும், எல் அண்ட் டி பைபாஸ் சாலையை விரிவாக்கவும், மதுக்கரை பாலக்காடு சாலை மரப்பாலம் பகுதியிலிருந்து விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக விரோத செயல்கள் தடுக்க கோவையில் உள்ள தேசிய பஞ்சாலை மில்கள் மூடி கிடப்பதை ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இந்த கோரிக்கைகளை கோவை மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமெனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் தொழிலதிபர்கள் கேட்டுக்கொண்டனர்.



இதற்கு பதிலளித்துப் பேசிய எம்.பி. சண்முகசுந்தரம், கோவை மாவட்டம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை மத்திய அரசுடன் பேசி தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...