நீலகிரி கக்கநல்லா சோதனை சாவடியில் 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்!

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனை சாவடியில் 500கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து குடிமைப் பொருள் புலனாய்வுத் துறை போலீசார் நடவடிக்கை.


நீலகிரி: ரேசன் அரிசியை சிலர் குறைந்து விலைக்கு வாங்கி கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கடத்துவதாகப் புகார்கள் குவிந்து வந்த நிலையில் 500கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியைச் சிலர் குறைந்து விலைக்கு வாங்கி கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட குடிமைப் பொருள் புலனாய்வு துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றது.

இதனையடுத்து போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் இன்று கூடலூரிலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் கக்கநல்லா பகுதியில் குடிமைப் பொருள் புலனாய்வு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வாகனத்தைச் சோதனை செய்தபோது 500கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.



அதனைப் பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரை விசாரித்த போது கோத்தகிரியிலிருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து ரேசன் கடத்தி வந்த கோத்தகிரி சேட் லைனை சார்ந்த ஓட்டுநர் நரேந்திரன்(40) கைது செய்த போலீசார் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...