கோவையில் பிணையப் பத்திர உத்தரவை மீறிய இளைஞருக்கு 294 நாட்கள் சிறை

கோவை வடவள்ளியில் பிணையப் பத்திர உத்தரவை மீறிய இளைஞரை 294 நாட்கள் சிறையில் அடைக்க பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவு.


கோவை: கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 'சுள்ளான்' என்ற வாலிபர் நன்னடத்தை பிணையப் பத்திரத்தை மீறியதால்,294 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தீபக் என்ற சுள்ளான் (21) என்பவரை போலீசார் பலமுறை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தீபக் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் முன்னிலையில் நன்னடத்தை பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். மேலும் இனி இம்மாதிரியான தவறுகளைச் செய்ய மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் தீபக் நன்னடத்தை பிணையப் பத்திர உத்தரவுகளை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். அவரை வடவள்ளி போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிணையப் பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக,செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த 294 நாட்கள் தீபக்கைச் சிறையில் வைக்கப் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்தியச் சிறையில் உள்ள தீபத்துக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...