2 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் கொடுமை - கோவையில் இருவர் கைது

கோவையில் 2 ஆண்டுகளாக 10 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: 10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கோவையை சேர்ந்தவர் ராஜ் என்கிற அதிர்ஷ்டராஜ் (27). இவருக்கு திருமணமாகி. மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அதிர்ஷ்டராஜ், அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, வீட்டுக்குள் அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் யாரிடம் சொல்லக்கூடாது என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார்.

நாளடைவில், அதிர்ஷ்டராஜின் நண்பரான எட்டிமடையை சேர்ந்த சுரேஷ்பாபுவிற்கும் இந்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து நண்பர்கள் இருவரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சம்பவத்தன்று அந்த சிறுமி அதிர்ஷ்டராஜ் வீட்டில் இருந்து அழுதபடி வெளியே வந்துள்ளார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, அவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து எடுத்து கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அதிர்ஷ்டராஜ் மற்றும் சுரேஷ் பாபு ஆகிய இருவரையும் பிடித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் அந்த சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...