கோவையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு அகற்றம்!

கோவையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டை, அறுவை சிகிச்சை இல்லாமல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றினர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 7 மாத குழந்தையின் சுவாச குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டை, மருத்துவர்கள் அகற்றினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த ஏழு மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் குழந்தையின் பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காது, மூக்கு, தொண்டை சிறப்பு பிரிவு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர். மேலும் குழாய் மூலமாக கருவியை செலுத்தி சுவாச குழாயில் சோதனை செய்தபோது குழந்தையின் சுவாசக் குழாயில் பிளாஸ்டிக் துண்டு சிக்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக தலைமை மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் பிளாஸ்டிக் துண்டை பத்திரமாக அகற்றினர். மேலும் பிளாஸ்டிக் துண்டு அகற்றப்படாமல் இருந்திருந்தால் நேரடியாக அது குழந்தையின் நுரையீரலுக்கு சென்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு உடனடியான சிகிச்சை மேற்கொண்டு பிளாஸ்டிக் துண்டுகளை அகற்றிய மருத்துவர்களை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டினார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...