திருப்பூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் - ரூ.1.91 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்பூரில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் வினீத் தேசியக்கொடி ஏற்றி வைத்து 113 பயனாளிகளுக்கு, ரூ.1.91 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.



திருப்பூர்: மாவட்ட நிர்வாகம் சார்பில் 74வது குடியரசு தின விழா, திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.



திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினை கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அனைவருக்கும் மரியாதை ஏற்றுக் கொண்டார்.



பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.



இதையடுத்து திருப்பூர் மாநகர போலீசில் சிறப்பாக பணியாற்றிய 71 போலீசாருக்கும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 86 போலீசருக்கும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.



இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறை, வருவாய்த்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, கூட்டுறவு நலச்சங்கங்கள், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 113 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்து 39 ஆயிரத்து 347 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...