உடுமலை எஸ்.வி.புரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதி

உடுமலை எஸ்.வி.புரம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: எஸ்.வி.புரம் பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் ரோடு எஸ்.வி.புரம் வழியாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, பிரதான வழித்தடமாக உள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் நெரிசல் மிகுந்த இந்த சாலையின், நகரப்பகுதியில் சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும், சாலையை ஆக்கிரமித்து, பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரதான வழித்தடமாக உள்ள இந்த சாலையை, அகலப்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், மீண்டும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...