பொள்ளாச்சி அருகே கராச்சேரியில் கிராம சபை கூட்டம் - மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்பு

கிணத்துக்கடவு அருகே கராச்சேரியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்று தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டு.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கராச்சேரியில் குடியரசு தின விழாவை ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.



பொதுமக்கள் கூறிய கருத்துக்களைக் கிராம சபைக் கூட்டத்தில் உள்ள பதிவேட்டில் பதியும்படி அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் அரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த உறுதி மொழியை பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் சமீரன் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.



இதில் அரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா உட்பட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...