'பொருளாதாரத்தில் பலமாக இல்லாவிடில் கலாச்சாரம், ஆன்மீகத்தை பாதுகாக்க முடியாது..!' - கோவை ஈஷா நிறுவனர் சத்குரு பேச்சு

பொருளாதாரத்தில்‌ பலமாக இல்லாவிட்டால்‌ நம்‌ நாட்டில்‌ இருக்கும்‌ கலாச்சாரம்‌, ஆன்மீகம்‌ என எதையும்‌ நம்மால்‌ பாதுகாக்க முடியாது என்று குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஈஷா நிறுவனர் சத்குரு பேச்சு.


கோவை: கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.



கோவை ஈஷா மையத்தில் 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.



இதில் சத்குரு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது,



தேசத்தில்‌ வாழும்‌ நாம்‌ ஜாதி, மதம்‌, மொழி, இனம்‌, உணவுப் பழக்கம்‌, கலாச்சாரம்‌ எனப் பல விதங்களில்‌ வேறுபட்டு உள்ளோம்‌. நம்மிடம்‌ எவ்வளவு வேறுபாடுகள்‌ இருந்தாலும்‌ நாம்‌ அனைவரும்‌ பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்‌.

சுதந்திரத்திற்கு முன்பு நம்‌ தேசத்தை 600-க்கும்‌ மேற்பட்ட குறு நில அரசர்கள்‌ ஆட்சி செய்து வந்தனர்‌. இருப்பினும்‌, வெளியிலிருந்து வந்தவர்கள்‌ அனைவரும்‌ நம்மை இந்துஸ்தான்‌ அல்லது பாரதம்‌ என்று ஒற்றை பெயர்‌ வைத்தே அழைத்தனர்‌.

நம்மிடம்‌ இருக்கும்‌ இந்த பன்மைத்துவத்தையும்‌, வேறுபாடுகளையும்‌ பயன்படுத்தி நமக்குள்‌ பிரிவினையை உருவாக்கும்‌ செயல்கள்‌ கடந்த 600 முதல்‌ 700 ஆண்டுகளில்‌ மிகவும்‌ தீவிரமாக நடந்துள்ளன. நம்‌ தேசத்தின்‌ மீது படையெடுத்தவர்களும்‌, ஆக்கிரமித்தவர்களும்‌ இதைப் பல வழிகளில்‌ மிகவும்‌ திட்டமிட்டுச் செய்துள்ளனர்‌.



குறிப்பாக, நம்‌ தேசத்தின்‌ பொருளாதார முதுகெலும்பைத் தகர்ப்பதற்கும்‌ அவர்கள்‌ செயல்‌ செய்துள்ளார்கள்‌. 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகளவில்‌ பொருளாதாரத்தில்‌ வளமான தேசமாக நம்‌ பாரத தேசம்‌ இருந்தது. அந்த நிலையை மீண்டும்‌ அடையும்‌ முயற்சியில்‌ நாம்‌ தற்போது உள்ளோம்‌.

பொருளாதார பலம்‌ இல்லாமல்‌ கலாச்சாரம்‌, ஆன்மீக விழுமியங்கள்‌ என நாட்டில்‌ உள்ள எதையும்‌ நம்மால்‌ பாதுகாக்க முடியாது. மேலும்‌, நம்மிடம்‌ இருக்கும்‌ பல விதமான வேறுபாடுகளைக் கடந்து எது நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது என்பதை நீங்கள்‌ கண்டறிந்து அதை மேலும்‌ பலப்படுத்த வேண்டும்,‌ என்றார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...