பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பாலச்சந்தருக்கு "தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது"


தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் தமிழக அரசின் சென்னை அறிவியல் -விழா 2017 கடந்த 09/02/2017 முதல் 12/02/2017 வரை இராணிமேரி கல்லூரி காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதில் அறிவியல் நகரம் உயர்கல்வித் துறையின் துறைத் தலைவராக சகாயம் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக், அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் கணேசன்,  அறிவுஒளி (அண்ணாபல்கலைக்கழகம்), தேவசேனாதிபதி (அறிவியல்நகரம்) ரீட்டா மற்றும் ஹேமா முன்னிலையில்  “தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது” பேராசிரியர் மற்றும் வேதியல்துறை ஆராய்ச்சி இயக்குனர் இராஜேந்திரன் க்கும் மற்றும் "தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது" மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை பாரதியார் பல்கலைக்கழகம் பேராசிரியர் பாலச்சந்தர்க்கு வழங்கப்பட்டது.

 

பாலச்சந்தர் கடந்த 2008 ஆம் ஆண்டு முனைவர் பட்டயப் படிப்பை பாரதியார் பல்கலைகழகத்தில் முடித்து தங்கப்பதக்கத்துடன் கூடிய முனைவர் பட்டதைப் பெற்றார். இவர் 2011ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் மேற்படிப்பை பயின்றார். 2013 ஆம் ஆண்டு இந்திய அரசின் இளம் விஞ்ஞானி ஆராய்ச்சி திட்டம் (FAST TRACK – Project) மூலம் ருபாய் இருபத்தைந்து லட்சத்து  ஐம்பதாயிரம் (25,50,000) பெற்றுள்ளார். மேலும் இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். மரபியல் ஆராய்ச்சியை மலைவாழ் மக்களிடம் மேற்கொண்டு வருகிறார். 

நரம்பியல் மரபணு குறைபாடு தொடர்பான ஆராய்ச்சியை துவங்குவதற்காக அமெரிக்காவின் Calofornia பல்கலைக்கழகத்துடன் இணைந்து (MOU) ஒப்பந்தம் -மனிதகுருத்தணு தொடர்பாக பெற்றுள்ளார். இவ்வாறாக பல்வேறு சாதனைகளை புரிந்த பாலச்சந்தர் அவர்களுக்கு தமிழக அரசின் உயர்கல்வித்த்துறை சார்பாக அறிவியல் நகரம் வழங்கும் தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது கௌரவப்படுத்தி வழங்கப்பட்டதை துணைவேந்தர் கணபதி அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். 

மேலும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை தலைவர் விஜய் ஆனந்த், முன்னாள் துறைத் தலைவர் சசிகலா, விலங்கியல் துறை மற்றும் பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...