திருப்பூர் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி - பரிசை வென்ற உடுமலை விவசாயி!

திருப்பூர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றிபெற்ற உடுமலை விவசாயிக்கு குடியரசு தினவிழாவில் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழா முன்னிட்டு வருடத்தோறும் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு குடியரசு தின விழா அன்று பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் கலந்து கொள்ள சம்பந்தப்பட்ட தாலுக்காவில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் 100 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், இந்த நிலையில் உடுமலை அருகே உள்ள ஆலம்பாளையம் பகுதியில் விவசாயி பழனிச்சாமி பயிர்விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டார்.

அதிகாரிகளின் களஆய்வுக்குபின் மக்காச்சோளம் சாகுபடியில் அதிகப்படியான மகசூல் எடுத்த காரணத்தால் திருப்பூர் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் உடுமலை விவசாயி இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து, நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற விவசாயி பழனிசாமிக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதேபோல், மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் முதலிடம் பிடித்த பொங்கலூர் வட்டாரம் அம்மாபாளையம் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜூக்கு பத்தாயிரம் ரொக்கப் பணம் மற்றும் சான்றிதழ் ஆட்சியரால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வினித் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...