கோவையில் செல்போனை பறித்துச் சென்ற திருடர்கள் - விரட்டிப் பிடித்த இளைஞர்.!

கோவை சாஸ்திரி சாலையில் சென்றுகொண்டிருந்த இளைஞரிடம், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் செல்போனை பறித்து தப்பமுயன்றபோது, பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



கோவை: கோவை ப்ரூக்ஃபீல்டில் வேலை செய்து வருபவர் விக்னேஸ்வரன் . இவர் வேலைக்கு செல்வதற்காக ராம் நகர் வழியே சாஸ்திரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், விக்னேஸ்வரனின் செல்போனை பறித்து தப்பி ஓட முயன்றுள்ளனர்.

அப்போது, அவர்களை துரத்தி பிடிக்க விக்னேஸ்வரன் முயன்றார். அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தை மடக்கிய விக்னேஸ்வரன், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பிடிபட்ட நபர்களிடம் கார்ட்டூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறியில் ஈடுபட்ட முதல் குற்றவாளி வசந்தகுமார் வர்ஷாவில் பணியாற்றக்கூடிய நபர் என்றும், இவர் மீது முன்பே காவல் நிலையங்களில் சில வழக்குகள் நடந்து வருவதும் தெரியவந்தது.

இவருக்கு உதவியாக இருந்த துரைசாமி அண்ணா மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருவது உறுதிசெய்யப்பட்டது. செல்போன் திருட்டில் பிடிப்பட்ட இருவரும் 19வயதான இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...