சாலை பணிகளால் பாதிக்கப்படும் விளைநிலங்கள் - வாகனங்களை சிறைப்பிடித்த உடுமலை மக்கள்!

திருப்பூர் உடுமலை வழியாக நடைபெறும் நான்கு வழி சாலை பணிக்காக செல்லும் கனரக வாகனங்களால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி சின்னவீரன்பட்டி அருகே பொதுமக்கள் கனரக வாகனங்களை சிறைபிடித்து போராட்டம்.



திருப்பூர்: பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லும் வகையில், 1500 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சின்னவீரன்பட்டி அடுத்த ஆர்.கே.ஆர் பள்ளி பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இரவு பகலாக கனரக வாகனங்கள் சென்று வருவதால் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.



குறிப்பாக தென்னை, வாழை மரம், மல்பெரி செடிகள் உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்கள் மண் தூசியின் காரணமாக மகசூல் குறைய வாய்ப்புள்ளது.



தூசி உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்கும் விதமாக சாலைகளில் தண்ணீர் ஊற்றி விட்டு வாகனங்களை இயக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து வாகனங்களை இயக்கி வருவதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இரண்டு நாளில் சம்பந்தப்பட்ட கனரக ஒப்பந்ததாரரை அழைத்து விசாரணை மேற்கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...