கோவை அருகே விவசாய தோட்டத்தில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை - வைரலாகும் வீடியோ!

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கோவனூர் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டுயானை 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தின்று சேதப்படுத்திச் சென்றது. காட்டு யானை தோட்டபகுதிக்குள் சுற்றித் திரியும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஒற்றை யானை புகுந்து 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலமலை வனப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகளில் சில யானைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.



இந்த நிலையில், நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்து உள்ள கோவனூர் பகுதியில் ஒற்றை காட்டு யானை உணவு தேடி வந்துள்ளது.



அங்கிருந்த குணா என்பவரது தோட்டத்திற்குள் இரவில் புகுந்த அந்த ஒற்றைக் காட்டுயானை, அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தின்று சேதப்படுத்திச் சென்றது. காட்டு யானை தோட்டபகுதிக்குள் சுற்றித் திரிவதை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...