திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் எதிர்க்கட்சியாக செயல்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.


சென்னை:

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு திமுக தலைவர் M. K. Stalin தலைமை தாங்குகிறார்.

இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மே 14 அன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தோல்வியடைந்தது கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆளும் கட்சியாக இருந்த திமுக 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.

இதையடுத்து, இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையிலும் மக்களிடையிலும் செயல்பட வேண்டிய அணுகுமுறைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...