கூட்டுறவு அங்காடிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை - கோவை தென்னை விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடை மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்.


கோவை: நியாயவிலைக்கடை மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய் மற்றும் அதன் மதிப்பு கூட்டு பொருட்கள் சத்துக்கள் மிகுந்த உணவு பொருட்கள் என மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு, நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இது மானியமாக விற்கப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து 72 % எண்ணெய் வித்துக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கு பெருமளவில் மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது. இதற்குப் பதிலாக தேங்காய் எண்ணெயை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.



வெளிநாடுகளில் இருந்து தேங்காய் புண்ணாக்கை இறக்குமதி செய்து அதிலிருந்து தேங்காய் எண்ணெய் எடுக்காமல் அராங்கங்களே நேரடியாக தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காயை கொள்முதல் செய்து எண்ணை தயாரித்து, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நியாயவிலை கடைகள் மூலமாக விற்க வேண்டும்.

இதன் மூலம் அந்நிய செலாவணி குறைந்து உள்நாட்டு தென்னை வர்த்தகம் பொருளாதாரம் மேம்படும் என்று தென்னை விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

விலை வீழ்ச்சியால் நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...