சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு - கோவை மாநகர போலீசார் பிரச்சாரம்

சைபர் கிரைம் மோசடிகள் குறித்து கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சைபர் கிரைம் போலீசார் சார்பில், பொதுமக்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சைபர் கிரைம் மோசடிகள் குறித்து மக்களிடையே கோவை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி எண்ணை பெற்று பணத்தை திருடுதல் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

அதேபோல், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நமது சொந்த தகவல்களை திருடி அதன் மூலம் மிரட்டி பணம் பறித்தல், மொபைல் ஆப் மூலம் கடன் தருவதாக கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்த சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நோட்டீஸ் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இம்மாதிரி இணையதள மோசடி மூலம் பணத்தை பொதுமக்கள் இழந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசை அணுகினால் இழந்த பணத்தை மீட்க முடியும்.

எனவே இணையதளத்தை அதிகளவு பயன்படுத்தும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...