கோவை கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கோவை மாவட்ட அனைத்து கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி சங்க அலுவலகத்தில், அண்ணா கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் ஜி.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் கடுமையான மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மணல் விற்பனையாளர்கள் ஒரு யூனிட் மணலை ரூ 10,000ம் வரை விலையை உயர்த்தி விற்கிறார்கள். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள விலையோ ஒரு யூனிட் ரூ 650 மட்டும்தான். அத்துடன் லாரி வாடகையும் சேர்த்து கணக்கிடப்பட வேண்டும். ஆனால் வியாபாரிகள் மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி மணல் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளார்கள். 

எனவே, சமீப காலமாக நமது மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் எதுவும் நடப்பதில்லை. கட்டுமானப் பணிகள் நடக்காததால், தொழிலாளர்கள் வேலையின்றி பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் பட்டினி சாவுகள் கூட நிகழலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த விசயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு மணல் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலூக்கா தலைநகரங்களில் மணலை இருப்பு வைத்து அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்றும், கோரிக்கை நிறைவேறாத சூழ்நிலை நீடித்தால் வரும் மார்ச் 1ம் தேதி கோவை டவுன்ஹால் அருகில் உள்ள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...