மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் சூரிய ஜெயந்தி வைபவம்!

மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா, சூரிய ஜெயந்தி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா, சூரிய ஜெயந்தி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், ரத சப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா வைபவம் மற்றும் சூரிய ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது.

ரதசப்தமியை ஒட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இன்று காலை சிறப்பு யாகம் மற்றும் சூரிய பிரபை புறப்பாடு நடத்தப்பட்டு சூரியனுக்கு விசேஷ ஆர்த்தி நடைபெற்றது.

தொடர்ந்து மலையப்ப சாமி சேஷ வாகனம், அன்னபக்ஷி வாகனம், அனுமந்த வாகனம், போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.



முன் மண்டபத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பெருமாள் ஒவ்வொரு வாகனங்களிலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது பக்தர்கள் பேரீட்சை, அவல், பழங்கள் போன்றவற்றை தீபத்துடன் தட்டில் எடுத்து சுவாமிக்கு காணிக்கையாக அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு, கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பியவாறு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...