மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் சூரிய ஜெயந்தி வைபவம்!

மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா, சூரிய ஜெயந்தி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா, சூரிய ஜெயந்தி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், ரத சப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா வைபவம் மற்றும் சூரிய ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது.

ரதசப்தமியை ஒட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இன்று காலை சிறப்பு யாகம் மற்றும் சூரிய பிரபை புறப்பாடு நடத்தப்பட்டு சூரியனுக்கு விசேஷ ஆர்த்தி நடைபெற்றது.

தொடர்ந்து மலையப்ப சாமி சேஷ வாகனம், அன்னபக்ஷி வாகனம், அனுமந்த வாகனம், போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.



முன் மண்டபத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பெருமாள் ஒவ்வொரு வாகனங்களிலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது பக்தர்கள் பேரீட்சை, அவல், பழங்கள் போன்றவற்றை தீபத்துடன் தட்டில் எடுத்து சுவாமிக்கு காணிக்கையாக அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு, கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பியவாறு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...