நீலகிரியில் ரூ.17.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - திமுக எம்.பி. ஆ.ராசா, அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்பு

கூடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகள் சார்பில் 465 பயனாளிகளுக்கு ரூ.17.50 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் வழங்கினர்.


நீலகிரி: கூடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.17.50 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு வழங்கினர்.



நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள நர்த்தகி திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாபெரும் மருத்துவ முகாமினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டனர்.

பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில், சமூக நலத்துறை, சத்துணவு திட்டத்தின் கீழ், தேவர் சோலை, ஸ்ரீ மதுரை, மசினகுடி, மச்சக்கொல்லி, புளியம் பாறை, தேவாலா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

அதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சேரன் கோடு ஊராட்சி அய்யன் கொல்லியில் கிராம சந்தை கட்டிடம் உள்ளிட்ட ரூ.98.65 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை, பேரூராட்சிகள் துறைகள் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டனர்.



இதையடுத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 465 பயனாளிகளுக்கு ரூ.17.50 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்வில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...