கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

கோவை வெள்ளலூர் பேரூராட்சியை சேர்ந்த 23 விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.


கோவை: தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுடன் இணைந்து தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சியைச் சேர்ந்த சுமார் 23 பேர், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு கடந்த 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடந்த வெள்ளையனே வெளியேறு ரயில் கவிழ்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல 12 விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர்.

அந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுடன் இணைந்து தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கப்பட்டன.



இந்த விழாவில், விடுதலை போராட்ட தியாகி வி.என்.அருணாச்சலம் நினைவை கூறும் வகையிலான அவரது வரலாறுகளைக் குறிக்கும் புத்தகம் வெளியிடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமார், எழுத்தாளர் வேலாயுதம், கவிஞர் வடிவேலு மற்றும் முன்னாள் விடுதலை போராட்ட தியாகிகள் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...