வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளை விரட்டிய காட்டு யானைகள் - ஆபத்தை உணராமல் போட்டோ எடுத்ததால் விபரீதம்!

கோவை மாவட்டம் வால்பாறையில் கோயில் அருகே வந்து நின்ற காட்டு யானைக் கூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்தனர். ஆபத்தை உணராமல் செய்த செயலால் காட்டு யானைகள் சுற்றுலாப் பயணிகளை விரட்டியதால் அங்கு பதற்றம் நிலவியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை சிறுத்தை காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் மனிதர்களை அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் வால்பாறை அருகே புதுதோட்டம் பொள்ளாச்சி சாலையில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு வந்தனர்.

இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 25 காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் யானைகளை பார்த்து புகைப்படம் எடுத்து சத்தமிட்டுக்கொண்டிருந்தன.

மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர் யானை அருகில் சுற்றுலா பயணிகளை செல்ல விடாமல் தடுத்து நின்று பாதுகாப்பு பணியில் இருந்தனர். இருப்பினும், காட்டு யானைகளின் கூட்டத்திலிருந்து நான்கு யானைகள் பிரிந்து மக்கள் நிற்கும் கோவில் பகுதிக்கு வேகமாக வந்தது.



வனத்துறையினர் யானைகளை விரட்டியும் யானை செல்லாமல் கோயில் அருகே வந்து நின்று நேற்று மதியம் அன்னதானமிட்ட சாப்பாடு கழிவுகளை தேயிலை தோட்டத்தில் கொட்டி இருந்தனர். அதை சாப்பிட்டும் அங்கு வாழை மரம் போன்றவை இருந்ததால் அதை சாப்பிட்டும் காட்டு யானை சிறிது நேரம் நின்றது. வனத்துறையினர் யானைகளை விரட்டியும் செல்லாமல் நின்று கொண்டிருந்தது. இதைப்பார்த்த சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வந்த பக்தர்களும் புகைப்படம் எடுத்து ஆரவாரம் செய்தனர்.



சிறிது நேரத்தில் தேயிலை தோட்டத்தில் இருந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் முயற்சித்தனர். அப்போது, யானை செல்லும் பாதையிலேயே சுற்றுலா பயணிகள் சென்று புகைப்படம் எடுத்தனர்.



இதனால், கூட்டத்தில் இருந்த ஒரு காட்டு யானை அவர்களை துரத்தி சாலைவரை விரட்டி வந்தது. இதில், அவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரம் அப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்கு திரும்பச் சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று புகைப்படம் எடுத்து வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் கண்டிக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், வனத்துறையினர் மனித விலங்கு மோதலை தடுப்பதற்கு, பணியில் இருக்கும்பொழுது அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும், யூனிபார்ம் மற்றும் விசில், அடையாள அட்டை போன்றவை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...