வால்பாறையில் மனிதநேய வார விழா கொண்டாட்டம் - பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு!

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனித நேய வார விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை கல்லூரியில் மனித நேய வார விழா நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலத்துறை சார்பாக பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதியில் இந்த விழா நடத்தப்பட்டது.



இதில், ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் பழங்குடியினர் பள்ளி என 9 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இணைந்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மனித நேயத்தை பற்றி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் தலைமையில் 6 பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் மக்கள் குறை திறப்பு முகாம் நடைபெற்றது.



வன பகுதியில் செல்ல சாலை வசதி வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வேண்டும்,பழங்குடி கிராமங்களுக்கு மின் இணைப்பு வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சார் ஆட்சியரிடம் பழங்குடி மக்கள் மனு அளித்தனர். பின்னர் பேசிய சார் ஆட்சியர், பழங்குடியின மக்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படும், என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...