உடுமலையில் புதுப்பிக்கப்பட்ட 120 ஆண்டு பழமையான பள்ளிவாசல் திறப்பு - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 120 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டது. இந்த விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் முதல் மற்றும் இரண்டாம் நகர மன்றத்தலைவர் ராவ் பகதூர் சையது திவான் அப்துல் ரசாக் மற்றும் கான் பகதூர் ஜனாப் சையது திவான் மொகிதீன் சாகிப் பாட்சா ஆகியோர், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 1917 முதல் 1928 வரை நகர மன்றத் தலைவர்களாக இருந்து மக்களாட்சி நடைபெற்றது.



மேலும், சோழிய கவுண்டர் இறப்பின்போது ஒவ்வொரு பள்ளி வாசலிலும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தப்பள்ளிவாசலிலும் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டதாக உடுமலை வரலாற்று நூல் தெரிவிக்கிறது.



வரலாற்று சிறப்பும் சமூக ஒற்றுமையும் நிறைந்த பாரம்பரிய மிக்க 120 ஆண்டு கால ஜாமிஆ மஸ்ஜித் சுன்னத் ஜமாத் புதுப்பிக்கபட்ட பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில், செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உடுமலையில் 120 ஆண்டுகள் பழமையான ஜாமியா மஸ்ஜித் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். தமிழக முதல்வர் சார்பிலும் எனது தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



திறப்பு விழா நிகழ்ச்சியில் திருச்சி அரபி கல்லூரி அன்வாலூர் உழும் அரபிக் கல்லூரி முதல்வர் ரூ ஸுல் ஹக், முன்னாள் அமைச்சர் உடுமலைக்கு ராதாகிருஷ்ணன் , நகர திமுக செயலாளர் சி வேலுச்சாமி , அதிமுக நகர செயலாளர் ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில், சுமார் 3000 பேருக்கு அறுசுவை பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...